கோவையில் கம்பீரமாக வலம் வந்த பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள்!

கோவை விழாவின் ஒரு பகுதியாக, கோவை நகரில் 1916 முதல் 1960 வரையிலான பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கோவை: கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இதைத் தொடர்ந்து, கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள காஸ்மாபாலிடென் கிளப்-லிருந்து சரவணம்பட்டி வரை பழங்கால கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

கடந்த 1916 முதல் 1960 வரை பயன்படுத்தப்பட்ட தற்போது நல்ல நிலையில் உள்ள 41 கார்கள் மற்றும் 20 இருசக்கர வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.



உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பியட், பென்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த கார்கள் மற்றும் பழைய ஸ்கூட்டர் உள்பட இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றிருந்தன.



இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு, அவிநாசி சாலை மற்றும் கணபதியை கடந்து சரவணம்பட்டி சென்றடைந்தன.



இந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.



இந்த வாகனங்கள் முன்பாக நின்றுக் கொண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் பிரியர்கள், ஆர்வமுடம் கண்டுகளித்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...