கோவை சாடிவயல் அருகே ஆற்றங்கரையோரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு - வனத்துறை விசாரணை

சாடிவயல் பெரியாற்றில் கிடந்த எலும்புக்கூடு 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடையது என்றும், யானை இறந்து சுமார் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழு தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சாடிவயல் பெரியாற்றில் அப்பகுதி பழங்குடி கிராம மக்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் இறந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.



மேலும், யானை உயிரிழந்து சுமார் 3 மாதங்கள் ஆகி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய எலும்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...