கோவை சாடிவயல் அருகே ஆற்றங்கரையோரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு - வனத்துறை விசாரணை

சாடிவயல் பெரியாற்றில் கிடந்த எலும்புக்கூடு 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடையது என்றும், யானை இறந்து சுமார் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழு தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சாடிவயல் பெரியாற்றில் அப்பகுதி பழங்குடி கிராம மக்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் இறந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.



மேலும், யானை உயிரிழந்து சுமார் 3 மாதங்கள் ஆகி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய எலும்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...