கோவை சாடிவயல் அருகே ஆற்றங்கரையோரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு - வனத்துறை விசாரணை

சாடிவயல் பெரியாற்றில் கிடந்த எலும்புக்கூடு 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடையது என்றும், யானை இறந்து சுமார் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவ குழு தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சாடிவயல் பெரியாற்றில் அப்பகுதி பழங்குடி கிராம மக்கள் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானையின் எலும்புக்கூடுகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.



இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் இறந்தது 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது.



மேலும், யானை உயிரிழந்து சுமார் 3 மாதங்கள் ஆகி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய எலும்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யானை உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...