கோவையை சேர்ந்த பிரித்திவ் என்ற 10ஆம் வகுப்பு மாணவர் 190 உலக நாடுகளின் தலைநகர், கரன்சி மற்றும் நாடுகளில் பேசப்படும் மொழிகளை 45 நிமிடங்களில் கூறி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கோவை: கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் - சங்கீதா தம்பதி. இவர்களின், இளைய மகன் பிரித்திவ், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில், மாணவர் பிரித்திவ், 190 நாடுகளை உலக வரைபடத்தில் கைகளால் காண்பித்தபடி அந்த நாடுகளின் தலைநகரங்கள், பேசப்படும் மொழிகள் மற்றும் கரன்சிகளை 45 நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு கைகளாலும் எழுதுவது உள்ளிட்ட ஏழு சாதனைகளை செய்துள்ள மாணவர் பிரித்திவின், இந்த புதிய சாதனை, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

பிரித்திவின் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் பரிந்துரை செய்தார். தொடர்ந்து தீர்ப்பாளர் அரவிந்த் பதக்கம் மற்றும் சான்றிதழை மாணவர் பிரித்திவ்-க்கு வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், மாணவர் பிரித்திவ், 190 நாடுகளை உலக வரைபடத்தில் கைகளால் காண்பித்தபடி அந்த நாடுகளின் தலைநகரங்கள், பேசப்படும் மொழிகள் மற்றும் கரன்சிகளை 45 நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு கைகளாலும் எழுதுவது உள்ளிட்ட ஏழு சாதனைகளை செய்துள்ள மாணவர் பிரித்திவின், இந்த புதிய சாதனை, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
பிரித்திவின் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் பரிந்துரை செய்தார். தொடர்ந்து தீர்ப்பாளர் அரவிந்த் பதக்கம் மற்றும் சான்றிதழை மாணவர் பிரித்திவ்-க்கு வழங்கி கவுரவித்தார்.