190 நாடுகளின் தலைநகர், கரன்சி உள்ளிட்டவற்றை 45 நிமிடத்தில் சொல்லி உலக சாதனை படைத்த கோவை மாணவர்

கோவையை சேர்ந்த பிரித்திவ் என்ற 10ஆம் வகுப்பு மாணவர் 190 உலக நாடுகளின் தலைநகர், கரன்சி மற்றும் நாடுகளில் பேசப்படும் மொழிகளை 45 நிமிடங்களில் கூறி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.


கோவை: கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் - சங்கீதா தம்பதி. இவர்களின், இளைய மகன் பிரித்திவ், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.



இந்நிலையில், மாணவர் பிரித்திவ், 190 நாடுகளை உலக வரைபடத்தில் கைகளால் காண்பித்தபடி அந்த நாடுகளின் தலைநகரங்கள், பேசப்படும் மொழிகள் மற்றும் கரன்சிகளை 45 நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு கைகளாலும் எழுதுவது உள்ளிட்ட ஏழு சாதனைகளை செய்துள்ள மாணவர் பிரித்திவின், இந்த புதிய சாதனை, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.



பிரித்திவின் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் பரிந்துரை செய்தார். தொடர்ந்து தீர்ப்பாளர் அரவிந்த் பதக்கம் மற்றும் சான்றிதழை மாணவர் பிரித்திவ்-க்கு வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...