திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,26,486ஆக உள்ளது

திருப்பூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று வெளியிட்ட நிலையில், அதன்படி, ஆண் வாக்காளர்கள் - 11,44,309 , பெண் வாக்காளர்கள் - 11,81,334 , மூன்றாம் பாலினத்தவர் - 334 என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, வடக்கு உள்ளிட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வினீத் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.



இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 44 ஆயிரத்து 309 பேர் என்றும் பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 81 ஆயிரத்து 843 பேர் எனவும் மூன்றாம் பாலினத்தவர்கள் 334 பேர் என மொத்தம் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கிராமம் மற்றும் நகர்புறங்களில் 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் அரசியல் கட்சியினரும் இளைஞர்களை அதிகளவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது, “வோட்டர்ஸ் ஹெல்ப் லைன்” (voters helpline) என்ற செல்போன் செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...