திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,26,486ஆக உள்ளது

திருப்பூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வினீத் இன்று வெளியிட்ட நிலையில், அதன்படி, ஆண் வாக்காளர்கள் - 11,44,309 , பெண் வாக்காளர்கள் - 11,81,334 , மூன்றாம் பாலினத்தவர் - 334 என தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, வடக்கு உள்ளிட்ட எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் வினீத் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.



இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 44 ஆயிரத்து 309 பேர் என்றும் பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 81 ஆயிரத்து 843 பேர் எனவும் மூன்றாம் பாலினத்தவர்கள் 334 பேர் என மொத்தம் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கிராமம் மற்றும் நகர்புறங்களில் 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் அரசியல் கட்சியினரும் இளைஞர்களை அதிகளவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது, “வோட்டர்ஸ் ஹெல்ப் லைன்” (voters helpline) என்ற செல்போன் செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...