கோவையில் சுகாதாரத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் - ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில் சுகாதார மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சுகாதார மேம்பாடு குறித்து மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.



மேலும், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், இணை சுகாதார நிலையங்களில் சுகாதார உட் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தேவையான களப்பணியாளர்களை நியமனம் செய்வது, அரசு மருத்துவமனைகள் சுகாதார நிலையங்களில் நிரப்பப்பட வேண்டிய பணியாளர்களின் விவரங்கள், போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.



இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, இப்பேரவையில் வைக்கப்படும் கோரிக்கைகள் மாநில அளவிலான சுகாதாரப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் மாநில அளவிலான பேரவை கூட்டத்தில் இந்த கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்ப நலத்துறை, சித்த மருத்துவ துறை, மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசு திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.



இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ,மேயர் கல்பனா ஆனந்தகுமார், கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...