கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சாவை கேரளா கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, கோவை வழியாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை தடுக்க கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கலால் துறை அதிகாரிகள் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாளையார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மூட்டைகளில் இருந்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து (27), செல்வம் (38) என இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாளையார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மூட்டைகளில் இருந்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து (27), செல்வம் (38) என இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.