கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

கோவை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 200 கிலோ கஞ்சாவை கேரளா கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, கோவை வழியாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை தடுக்க கேரள எல்லையான வாளையாறு, வேலந்தாவளம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கலால் துறை அதிகாரிகள் தொடர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் கலால் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் வாளையார் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட மீன் லோடு ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.



மூட்டைகளில் இருந்து 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் துறை அதிகாரிகள், கஞ்சாவை கடத்தி வந்த மயிலாடுதுறையை சேர்ந்த மாரிமுத்து (27), செல்வம் (38) என இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...