திருப்பூர் பல்லடத்தில் ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய முயன்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - பரபரப்பு..!

பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வாங்கிய ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). ஆட்டோ ஓட்டுனரான இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதற்கான தவணையை ஆறு மாதங்கள் மட்டும் செலுத்திய நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தவணை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.



இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரகுமானின் வீட்டுக்கு வந்துள்ளார்.



அப்போது, ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜப்தி நடவடிக்கை வேண்டாம் என்றும், கால அவகாசம் வழங்குமாறு நிதி நிறுவன ஊழியர்களிடம் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தொடர்ந்த நிலையில், கால அவகாசம் வழங்குமாறு அக்கம்பக்கத்தினர் ரகுமான் குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...