திருப்பூர் பல்லடத்தில் ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய முயன்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - பரபரப்பு..!

பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வாங்கிய ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). ஆட்டோ ஓட்டுனரான இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதற்கான தவணையை ஆறு மாதங்கள் மட்டும் செலுத்திய நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தவணை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.



இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரகுமானின் வீட்டுக்கு வந்துள்ளார்.



அப்போது, ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜப்தி நடவடிக்கை வேண்டாம் என்றும், கால அவகாசம் வழங்குமாறு நிதி நிறுவன ஊழியர்களிடம் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தொடர்ந்த நிலையில், கால அவகாசம் வழங்குமாறு அக்கம்பக்கத்தினர் ரகுமான் குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...