திருப்பூர் பல்லடத்தில் ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய முயன்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் - பரபரப்பு..!

பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், வாங்கிய ரூ.2 லட்சம் கடனுக்காக வீட்டை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). ஆட்டோ ஓட்டுனரான இவர், பல்லடத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

அதற்கான தவணையை ஆறு மாதங்கள் மட்டும் செலுத்திய நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தவணை செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.



இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரகுமானின் வீட்டுக்கு வந்துள்ளார்.



அப்போது, ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜப்தி நடவடிக்கை வேண்டாம் என்றும், கால அவகாசம் வழங்குமாறு நிதி நிறுவன ஊழியர்களிடம் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தொடர்ந்த நிலையில், கால அவகாசம் வழங்குமாறு அக்கம்பக்கத்தினர் ரகுமான் குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசியதை அடுத்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...