கோவை உக்கடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் G.M. நகர் கிளை சார்பில் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் E. பாரூக், மாவட்ட தலைவர் அஜ்மல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவியரின் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜமாஅத்தின் கோவை மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹீம் மற்றும் TNTJ பேச்சாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்! எதற்கு? என்ற தலைப்பில் உரையாற்றினர்.

அதேபோல், மாநில துணைத் தலைவர் E.பாரூக், சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.
மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் E. பாரூக், மாவட்ட தலைவர் அஜ்மல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவியரின் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜமாஅத்தின் கோவை மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹீம் மற்றும் TNTJ பேச்சாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்! எதற்கு? என்ற தலைப்பில் உரையாற்றினர்.
அதேபோல், மாநில துணைத் தலைவர் E.பாரூக், சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.