தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்.5-ல் திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு

கோவை உக்கடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் G.M. நகர் கிளை சார்பில் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் E. பாரூக், மாவட்ட தலைவர் அஜ்மல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவியரின் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜமாஅத்தின் கோவை மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹீம் மற்றும் TNTJ பேச்சாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்! எதற்கு? என்ற தலைப்பில் உரையாற்றினர்.



அதேபோல், மாநில துணைத் தலைவர் E.பாரூக், சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...