கோவையில் வாங்கிய கடனை திருப்பி கேட்டபோது தகராறு-கடன் தந்தவர் விட்ட பளாரில் பறிபோன உயிர்

கோவை பீளமேடு அருகே ரூ.200 கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கடன் தந்தவர் அறைந்ததில், சுருண்டு விழுந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமிமணன் ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.200 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கேஸ்வரன் அந்த பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த லட்சுமணன் கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், கங்கேஸ்வரன் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் சுருண்டு கீழே விழுந்த கங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 ரூபாய் கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கன்னத்தில் அறைந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...