கோவை பீளமேடு அருகே ரூ.200 கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கடன் தந்தவர் அறைந்ததில், சுருண்டு விழுந்த கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்.
கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமிமணன் ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.200 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கங்கேஸ்வரன் அந்த பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த லட்சுமணன் கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், கங்கேஸ்வரன் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் சுருண்டு கீழே விழுந்த கங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
200 ரூபாய் கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கன்னத்தில் அறைந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
இந்நிலையில் கங்கேஸ்வரன் அந்த பணத்தை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே லட்சுமணன் பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கங்கேஸ்வரன் சவுரிபாளையம் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த லட்சுமணன் கங்கேஸ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், கங்கேஸ்வரன் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் சுருண்டு கீழே விழுந்த கங்கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர் லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
200 ரூபாய் கடனை திருப்பி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கன்னத்தில் அறைந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..