கோவையில் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ஐடி ஊழியர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே தனியார் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐ.டி ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வேலப்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சண்முகா சாலையில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முத்து குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமார் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் (23) என்பதும், பி.பி.ஏ பட்டதாரியான இவர், ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...