கோவையில் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ஐடி ஊழியர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே தனியார் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐ.டி ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வேலப்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சண்முகா சாலையில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முத்து குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமார் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் (23) என்பதும், பி.பி.ஏ பட்டதாரியான இவர், ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...