ஊராட்சி தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது - கோவையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு

ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி வரவேற்று பேசினார்.



மேலும், இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை முனியாண்டி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார், கிராம சபை கூட்டத்தில் போடப்படும் தீர்மானங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் 15 வது நிதிக்குழுவை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.



இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசை முனியாண்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...