ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி வரவேற்று பேசினார்.

மேலும், இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை முனியாண்டி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார், கிராம சபை கூட்டத்தில் போடப்படும் தீர்மானங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் 15 வது நிதிக்குழுவை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசை முனியாண்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டமைப்பின் தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி வரவேற்று பேசினார்.
மேலும், இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை முனியாண்டி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார், கிராம சபை கூட்டத்தில் போடப்படும் தீர்மானங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் 15 வது நிதிக்குழுவை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசை முனியாண்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.