கோவை - மேட்டுப்பளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 800 பேர் கைது

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உட்பட 800 பேர் கைது.


கோவை: தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும், நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 800 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...