கோவை - மேட்டுப்பளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 800 பேர் கைது

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் உட்பட 800 பேர் கைது.


கோவை: தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை போக்குவரத்து அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும், உரிய நேரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும், நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 800 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...