கோவை துடியலூர் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி - தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

துடியலூர் அடுத்த ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிய நிலையில், பொதுமக்கள் துரத்தியதால், தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே மாநகராட்சி 1வது வார்டு அப்பநாயக்கன் பாளையம் - ஐஸ்வர்யா கார்டன் உள்ளது. இதன் அருகில் நேற்று இரவு மர்ம நபர்கள் தனியார் இடத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி சாய்த்து துண்டு போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது வெட்டிய சந்தன மரத்தை எடுத்து செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தவர்களை பொதுமக்கள் துரத்தியபோது மரத்தை விட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் மற்றும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் அப்பநாயக்கன் பாளையம், பன்னீர் மடை, வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதிகளில் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்துவது, வீட்டில் உள்ள காலி கேஸ் சிலிண்டர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பகுதிகளில் போலீசார், இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...