கோவையில் ஆக்டிங் டிரைவராக வந்து காரை திருடி சென்ற நபர் கைது

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசிக்கும் சுதாகர் (52) என்பவர் கடந்த 8 ஆம் தேதி தனது சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வதற்காக ஆக்டிங் டிரைவராக ஒருவரை வரவழைத்துள்ளார். அந்த நபர், காரை திருடிக்கொண்டு தப்பினார்.

இதையடுத்து, சுதாகர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சந்திரசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...