21 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு….! பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கையாடல் - கூட்டுறவு சங்க எழுத்தருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவணபாபு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1987 - 1993 காலகட்டத்தில் செயலராக பணியாற்றி வந்த நாகராஜ், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சங்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையில் ரூ.20 ஆயிரம் கையாடல் செய்தனர்.

இது குறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் சுந்தரம் வணிக குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கடந்த 1995 ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001 ஆம் ஆண்டு விசாரணை துவங்கியது. விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய கூட்டுறவு செயலாளர் நாகராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஜே.எம்.4 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.

இன்று இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவண பாபு உத்தரவிட்டார். மேலும், விஜயகுமார் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...