21 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு….! பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கையாடல் - கூட்டுறவு சங்க எழுத்தருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவணபாபு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் செயல்பட்டு வந்த பொதுப்பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1987 - 1993 காலகட்டத்தில் செயலராக பணியாற்றி வந்த நாகராஜ், எழுத்தர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சங்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையில் ரூ.20 ஆயிரம் கையாடல் செய்தனர்.

இது குறித்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் சுந்தரம் வணிக குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கடந்த 1995 ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2001 ஆம் ஆண்டு விசாரணை துவங்கியது. விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் இருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய கூட்டுறவு செயலாளர் நாகராஜ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஜே.எம்.4 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பில் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.

இன்று இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட எழுத்தர் விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதியரசர் சரவண பாபு உத்தரவிட்டார். மேலும், விஜயகுமார் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...