ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் வீட்டு மனை பட்டா - கோவை வெள்ளலூரில் வீட்டுமனை பட்டா கோரி பெண்கள் சாலை மறியல்…!

ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் மூலம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய பெண்கள் வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் வள்ளியம்மைபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 86 குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.



இந்நிலையில், விண்ணப்பித்திருந்த 86 மனுக்களில், 56 நபர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என்றும் விண்ணப்பித்த மீதி 30 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறி வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய பெண்கள், ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் மூலம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுடன் விண்ணப்பித்த எங்களுக்கு பட்டா வழங்கவில்லை, எனவே, விண்ணபித்த தங்களுக்கும் வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



பட்டா வேண்டி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஈடுபட்டதால் வெள்ளலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...