கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கோவையை சேர்ந்த மேலும் இருவர் கைது - என்.ஐ.ஏ அதிகாரிகள் நடவடிக்கை….!

கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அல் அமீன் காலனியை சேர்ந்த சேக் இதாயத்துல்லா மற்றும் வின்சன் ரோடு பகுதியை சேர்ந்த சனோபர் அலி ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் உமர் பாரூக், பெராஸ்கான் உள்பட 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கைதான 9 பேரில் முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக கோவை, நீலகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடந்தி வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை அடிப்படையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு முக்கியமான நபர்களான கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த சேக் இதாயத்துல்லா மற்றும் வின்சன் ரோடு பகுதியை சேர்ந்த சனோபர் அலி ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் பாரூக் தலைமையில் சத்தியமங்கலம் அசனூர், கடம்பூர் வனப்பகுதியில் கடந்த பிப்ரவரியில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின், முகமது அசாருதீன், சேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் சதி திட்டம் தீட்டத்தை அரங்கேற்ற ஆலோசனை செய்தது என்.ஐ ஏ விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதையடுத்து, இருவரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கோவை கார் வெடிப்பு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...