கோவையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கவுண்டம்பாளையம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று கஞ்சா கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மனோஜ்-க்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவர் வேலைக்கு பேருந்தில் செல்லும் போது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதனிடையே மனோஜுக்கு கஞ்சா பழக்கம் இருந்த நிலையில் அவர் அந்த மாணவிக்கும் கஞ்சா பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனோஜ் அந்த மாணவியுடன் சேர்ந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், மனோஜ் அந்த மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மனோஜை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். மேலும் விசாரணையில் மனோஜ் அந்த மாணவிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதுகுறித்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனோஜ்க்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...