கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதான மராமத்து பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சிந்தடிக் ஓடுதளம் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும், மைதானம் சிறப்பு மராமத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிற்காக அவினாசி சாலையில் தங்கும் விடுதியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவினாசி சாலையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், ஜென்னி கிளப் அருகே 300 பேர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.6.55 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடு பாதை அமைக்கும் பணி (சிந்தடிக் ஓடுதளம்) மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் ஆகியவற்றை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர். மீனா லோகு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க்கள் ஆறுகுட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...