கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதான மராமத்து பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சிந்தடிக் ஓடுதளம் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும், மைதானம் சிறப்பு மராமத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிற்காக அவினாசி சாலையில் தங்கும் விடுதியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவினாசி சாலையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், ஜென்னி கிளப் அருகே 300 பேர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.6.55 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடு பாதை அமைக்கும் பணி (சிந்தடிக் ஓடுதளம்) மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் ஆகியவற்றை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர். மீனா லோகு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க்கள் ஆறுகுட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...