கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதான மராமத்து பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சிந்தடிக் ஓடுதளம் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும், மைதானம் சிறப்பு மராமத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிற்காக அவினாசி சாலையில் தங்கும் விடுதியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவினாசி சாலையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், ஜென்னி கிளப் அருகே 300 பேர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.6.55 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடு பாதை அமைக்கும் பணி (சிந்தடிக் ஓடுதளம்) மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் ஆகியவற்றை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர். மீனா லோகு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க்கள் ஆறுகுட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...