கோவையில் உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்ற இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவு

உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் மெட்டாபேட்டமைன் (Methamphetamine) என்னும் உயர்ரக போதை பொருளை விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல, அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சின்ன தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிஷோர் அகமது மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி, காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவுவின், அடிப்படையில் போதை பொருள் விற்பனை குற்றவாளிகளான கிஷோர் அகமது (33) மற்றும் கஞ்சா வழக்கு குற்றவாளியான சுரேஷ்குமார் (33) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நடப்பாண்டில் போதை பொருள்கள் (கஞ்சா, Methamphetamine) விற்பனையாளர்கள் 9 நபர்கள் உட்பட மொத்தம் 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...