கோவையில் உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்ற இருவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - ஆட்சியர் உத்தரவு

உயர்ரக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் மெட்டாபேட்டமைன் (Methamphetamine) என்னும் உயர்ரக போதை பொருளை விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல, அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சின்ன தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கிஷோர் அகமது மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி, காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

ஆட்சியரின் உத்தரவுவின், அடிப்படையில் போதை பொருள் விற்பனை குற்றவாளிகளான கிஷோர் அகமது (33) மற்றும் கஞ்சா வழக்கு குற்றவாளியான சுரேஷ்குமார் (33) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நடப்பாண்டில் போதை பொருள்கள் (கஞ்சா, Methamphetamine) விற்பனையாளர்கள் 9 நபர்கள் உட்பட மொத்தம் 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...