உதகை அருகே சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடந்த ஆண் சடலம் - போலீசார் தீவிர விசாரணை..!

உதகை அடுத்த எமரால்டு பகுதி சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட உடலா என போலீசார் தீவிர விசாரணை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்து உள்ளது. இதை எமரால்டு, சுரேந்திர நகர், பெரியார் நகர், நேரு கண்டி, நேரு நகர், லாரன்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எமரால்டு சுடுகாடு பகுதியை சுற்றி இருந்த புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக எமரால்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த உடல் கொலை செய்து இங்கு வீசப்பட்டதா அல்லது, பிரேத பரிசோதனை செய்த உடலை புதைக்காமல் வீசப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மீட்கப்பட்ட சடலம் 60 வயது மதிக்கதக்க ஆணின் உடல் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து எமரால்டு போலீசார விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...