உதகை அருகே சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடந்த ஆண் சடலம் - போலீசார் தீவிர விசாரணை..!

உதகை அடுத்த எமரால்டு பகுதி சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட உடலா என போலீசார் தீவிர விசாரணை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்து உள்ளது. இதை எமரால்டு, சுரேந்திர நகர், பெரியார் நகர், நேரு கண்டி, நேரு நகர், லாரன்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எமரால்டு சுடுகாடு பகுதியை சுற்றி இருந்த புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக எமரால்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த உடல் கொலை செய்து இங்கு வீசப்பட்டதா அல்லது, பிரேத பரிசோதனை செய்த உடலை புதைக்காமல் வீசப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மீட்கப்பட்ட சடலம் 60 வயது மதிக்கதக்க ஆணின் உடல் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து எமரால்டு போலீசார விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...