சொத்து வரி, பால் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட த.மா.கா இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.



கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து கோவை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகரத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக்கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் மூத்த நிர்வாகி குனியமுத்தூர் ஆறுமுகம், உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...