கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்ற பெண் மாயம் - கணவர் ஆலாந்துறை போலீசில் புகார்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு டிசம்பர் 11ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண், மாயமானதை தொடர்ந்து கணவர் பழனிக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆலந்துறை போலீசார் தீவிர விசாரணை.


கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிக்குமார். பனியன் நிறுவனத்தில் தர கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சுபஶ்ரீ (34). இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ ஈஷா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு பயிற்சிக்காக கடந்த 11 ஆம் தேதி மீண்டும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

இதனிடையே நேற்றுடன் பயிற்சி முடிவடைந்ததால் அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் வந்து பார்த்த போது, சுபஸ்ரீ நீண்ட நேரம் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கணவர் பழனிக்குமார் உள்ளே சென்று பார்த்த போது, சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுபஶ்ரீ காலையிலேயே வெளியே சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

மேலும் அவர் கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றதாக தெரியவந்தது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் கணவர் பழனிக்குமார் கோவை ஆலந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுபஶ்ரீயை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...