கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்ற பெண் மாயம் - கணவர் ஆலாந்துறை போலீசில் புகார்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு டிசம்பர் 11ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண், மாயமானதை தொடர்ந்து கணவர் பழனிக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆலந்துறை போலீசார் தீவிர விசாரணை.


கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிக்குமார். பனியன் நிறுவனத்தில் தர கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சுபஶ்ரீ (34). இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ ஈஷா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மற்றொரு பயிற்சிக்காக கடந்த 11 ஆம் தேதி மீண்டும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

இதனிடையே நேற்றுடன் பயிற்சி முடிவடைந்ததால் அவரை அழைத்துச் செல்ல அவரது கணவர் வந்து பார்த்த போது, சுபஸ்ரீ நீண்ட நேரம் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே கணவர் பழனிக்குமார் உள்ளே சென்று பார்த்த போது, சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சுபஶ்ரீ காலையிலேயே வெளியே சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

மேலும் அவர் கால் டாக்ஸியில் லிப்ட் கேட்டு செம்மேடு பகுதிக்கு சென்றதாக தெரியவந்தது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் கணவர் பழனிக்குமார் கோவை ஆலந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சுபஶ்ரீயை தேடி வருகின்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...