திருப்பூரில் கோவில் நிலத்தை மீட்க கோரி அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஊத்துக்குளி அடுத்த வெள்ளிரவெளி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள வெள்ளிரவெளி பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களின் குலதெய்வமான மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.



அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜை வழிபாடு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு நிறைந்த மோகன் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொங்கல் விழாவின் போது இடவசதி பற்றாக்குறை ஏற்படுவதால் கோவில் நிலத்தை மீட்டு கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.



இந்நிலையில், உடனடியாக கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வெள்ளிரவெளி பகுதி மக்களின் இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...