திருப்பூரில் கோவில் நிலத்தை மீட்க கோரி அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஊத்துக்குளி அடுத்த வெள்ளிரவெளி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள வெள்ளிரவெளி பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களின் குலதெய்வமான மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.



அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜை வழிபாடு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு நிறைந்த மோகன் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொங்கல் விழாவின் போது இடவசதி பற்றாக்குறை ஏற்படுவதால் கோவில் நிலத்தை மீட்டு கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.



இந்நிலையில், உடனடியாக கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வெள்ளிரவெளி பகுதி மக்களின் இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...