திருப்பூரில் கோவில் நிலத்தை மீட்க கோரி அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஊத்துக்குளி அடுத்த வெள்ளிரவெளி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தரக்கோரி பொதுமக்கள் அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள வெள்ளிரவெளி பகுதியில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களின் குலதெய்வமான மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.



அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜை வழிபாடு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் செல்வாக்கு நிறைந்த மோகன் குமார் மற்றும் சின்னச்சாமி ஆகியோர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொங்கல் விழாவின் போது இடவசதி பற்றாக்குறை ஏற்படுவதால் கோவில் நிலத்தை மீட்டு கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.



இந்நிலையில், உடனடியாக கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வெள்ளிரவெளி பகுதி மக்களின் இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...