பீளமேடு அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி அருந்ததியர் இன மக்கள், விசாகா ஸ்டீல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு, தங்களுக்கு வீடு மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை கட்டித்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த ஏடி காலனியில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு தங்களுக்கு வீடு மற்றும் கழிவறைகளை கட்டி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அருந்ததியர் இன மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான இடத்தை விசாகா ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். வீடில்லா அருந்ததியர் இன மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, PSG மருத்துவமனையின் மன்றம் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு அங்கு போர்க்கால அடிப்படையில் பொது கழிவறை அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததியர் இன மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...