பீளமேடு அருகே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு தரக்கோரி அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி அருந்ததியர் இன மக்கள், விசாகா ஸ்டீல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு, தங்களுக்கு வீடு மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை கட்டித்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த ஏடி காலனியில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டு தங்களுக்கு வீடு மற்றும் கழிவறைகளை கட்டி தர வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அருந்ததியர் இன மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான இடத்தை விசாகா ஸ்டீல் நிறுவனத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். வீடில்லா அருந்ததியர் இன மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, PSG மருத்துவமனையின் மன்றம் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு அங்கு போர்க்கால அடிப்படையில் பொது கழிவறை அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அருந்ததியர் இன மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...