கோவை ஆலந்துறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாட்கள் விளக்கு பூஜை நடைபெற்றது.32 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை: கோவை ஆலந்துறை ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் விளக்கு பூஜையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை ஆலந்துறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மார்கழி 1 தேதி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் துவங்கியது.7 நாட்களுக்கு நடைபெறும் இந்த பூஜைகளில், ஆலந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர்.
அதன்படி, நேற்று சனிக்கிழமை அகண்ட நாமம் பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
32 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தவிளக்கு பூஜையில், அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு விளக்குகளை ஏந்தி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.
சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கோயிலை நோக்கி நடந்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் 98 பவுன் எடை கொண்ட ஐயப்பன் தங்க விக்கிரகம்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது வேண்டுதலுக்காக பாலைக் குச்சிகளை ஏந்தி வந்த பக்தர்கள், நடனமாடியவாறு ஊர்வலம் வந்து வழிபட்டனர்.