ஆலாந்துறை ஶ்ரீ தர்மதாஸ்தா ஐயப்பன் கோவில் விளக்கு பூஜை - 2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

கோவை ஆலந்துறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாட்கள் விளக்கு பூஜை நடைபெற்றது.32 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை ஆலந்துறை ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் விளக்கு பூஜையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை ஆலந்துறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இந்த ஆண்டு மார்கழி 1 தேதி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் துவங்கியது.7 நாட்களுக்கு நடைபெறும் இந்த பூஜைகளில், ஆலந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர்.

அதன்படி, நேற்று சனிக்கிழமை அகண்ட நாமம் பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

32 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தவிளக்கு பூஜையில், அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு விளக்குகளை ஏந்தி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.

சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கோயிலை நோக்கி நடந்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் 98 பவுன் எடை கொண்ட ஐயப்பன் தங்க விக்கிரகம்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது வேண்டுதலுக்காக பாலைக் குச்சிகளை ஏந்தி வந்த பக்தர்கள், நடனமாடியவாறு ஊர்வலம் வந்து வழிபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...