திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு கருத்துக்களை திமுகவினர் கூறி வருகின்றனர். திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை என்று விமர்சித்தார்.


கோவை: இன்று பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல், என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,



அண்ணாமலைக்கும் அ.ராசாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அன்னூர் ஊராட்சியில் வரவுள்ள டிட்கோவை வைத்து தண்ணீரை குறிவைத்து நிறுவனங்கள் வருகிறது. அதனை ஆ.ராசா புரிந்து கொள்ள வேண்டும்.

உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு கருத்துக்களை திமுகவினர் கூறி வருகின்றனர். திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வது தான் ஒரே வேலை.

உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் பிழைக்க வேண்டுமா, வேண்டாமா?. அதிகாரத்தை வைத்து திரைத்துறையை ஒரு பக்கம் வைக்கக்கூடாது.

ரபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து 500 கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டது. அதில், ஒன்றை நான் வாங்கியுள்ளேன். நான் தேசியவாதி என் உயிர் உள்ளவரை இந்த கடிகாரம் என் கையில் இருக்கும்.

மேலும், அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. பாஜகவை பற்றி பேசி தான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய - திராவிடம் என்கிற பிரிவினையை ஏற்காதவன் நான். பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல்.

பாஜக சார்பில் 9 புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளோம். அரசின் அழுத்தத்தால் வழக்கு இல்லாமல் போகிறது. தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமானது. ஆனால்,

காவல்துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளது. கோவை கார் வெடி விபத்து என் ஐ ஏ விசாரணை திருப்திகரமாக உள்ளது.

அன்னூர் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவனம் வாங்கி வைத்துள்ள தரிசு நிலம் கையகப்படுத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது.

விவசாயம் பற்றி ஆளும்கட்சி உணர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. மேலும், இதில் தவறாக கொடுக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். நீர், நிலத்தை மாசுபடுத்தாத நிறுவனங்கள் மட்டுமே என அரசு தெரிவித்துள்ளது.. அதனை திமுக காப்பாற்ற வேண்டும், மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அன்னூர் தொழில் பேட்டை நிலம் கையகப்படுத்துதல் குறித்து

அ.ராசா செய்தியாளர்களிடம் பேசியது பச்சை பொய். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதேபோல, டேன்- டீ ஆரம்பித்தது லாப நோக்கிற்காக அல்ல. இலங்கையில் இருந்து வந்த மலையக தமிழர்களின் நலனுக்காக துவங்கப்பட்டது என்பதை ஆ. ராசா புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதும் ஆ.ராசா 2 ஜி குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது.

தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதல்வர் தான்.தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வை சந்திக்கின்றனர்.

கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. பாஜக தொடர் போராட்டங்களை கையில் எடுக்கும். திமுக அரசு பிரன்ச்சு புரட்சி ஏற்பட்டதற்கு நிகராக உள்ளது.

அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்கு செல்கிறது. ஆனால், ஆவின் நிறுவனம் அப்படி நடந்து கொள்ளவில்லை. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம், திமுக அமைச்சர் ஒருவரின் பால் நிறுவனம் ஊக்குவிக்கப்படுககிறது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...