பொள்ளாச்சியில் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் மோசடி செய்த கலெக்சன் ஏஜென்ட் கைது - குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வாகனங்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தில் பணியில் இருந்த, மாதத் தவணை வசூல் செய்யும் ஊழியர், ரூ.10.12 லட்சத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் அம்மன் நிதி நிறுவனம் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில், 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களுக்கு ஏஜெண்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்த விவேகானந்தன் (31) என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக அந்த நிதி நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றார். மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தவணையை வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்துவது தான் இவரது பணி.

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து விவேகானந்தன் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். தொடர்ச்சியாக அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த நிதி நிறுவனத்தினர், நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் ரூ.10.12 லட்சத்து விவேகானந்தன் கையாடல் செய்தது தெரியவந்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த விவேகானந்தன் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, விவேகானந்தன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...