பொள்ளாச்சியில் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் மோசடி செய்த கலெக்சன் ஏஜென்ட் கைது - குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வாகனங்களுக்கு கடனுதவி வழங்கும் நிதி நிறுவனத்தில் பணியில் இருந்த, மாதத் தவணை வசூல் செய்யும் ஊழியர், ரூ.10.12 லட்சத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் அம்மன் நிதி நிறுவனம் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில், 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களுக்கு ஏஜெண்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்த விவேகானந்தன் (31) என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் விற்பனை பிரதிநிதியாக அந்த நிதி நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றார். மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தவணையை வசூலித்து நிதி நிறுவனத்தில் செலுத்துவது தான் இவரது பணி.

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து விவேகானந்தன் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். தொடர்ச்சியாக அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த நிதி நிறுவனத்தினர், நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் ரூ.10.12 லட்சத்து விவேகானந்தன் கையாடல் செய்தது தெரியவந்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில், நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த விவேகானந்தன் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, விவேகானந்தன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...