கோவையில் உயர்ரக போதை மாத்திரையை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது….!

உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்ததற்காக சிறையில் உள்ள திருச்சூரை சேர்ந்த கோகுல் என்ற நபரை எஸ். பி பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு.


கோவை: கடந்த 2 மாதங்களுக்கு முன் துடியலூர் அருகே உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் (28) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து "மெத்தபாலிட்டிமைன்” என்ற உயர்ரக போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோகுலை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன், கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை செய்துள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...