உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்ததற்காக சிறையில் உள்ள திருச்சூரை சேர்ந்த கோகுல் என்ற நபரை எஸ். பி பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு.
கோவை: கடந்த 2 மாதங்களுக்கு முன் துடியலூர் அருகே உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் (28) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து "மெத்தபாலிட்டிமைன்” என்ற உயர்ரக போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோகுலை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன், கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை செய்துள்ளார்.
அவரிடம் இருந்து "மெத்தபாலிட்டிமைன்” என்ற உயர்ரக போதை மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோகுலை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், உயர்ரக போதை மாத்திரையை விற்பனை செய்த கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன், கோகுலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை செய்துள்ளார்.