மோசமான வானிலையால் இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரயில் சேவைகள் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே இரு வழித்தடங்களிலும் ரயில் சேவ ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லாறு - குன்னூர் இடையே நீலகிரி மலை ரயில் பாதையின் சில பகுதிகள் சேற்றால் மூடப்பட்டன.

பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. காற்று மற்றும் மழையால் வேரோடு சாய்ந்த மரங்களும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குன்னூர் - உதகமண்டலம் இடையே என்எம்ஆர் ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கப்படும்.

மோசமான வானிலை மற்றும் பாதகமான சூழலையும் மீறி சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...