மோசமான வானிலையால் இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரயில் சேவைகள் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தண்டவாளங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே இரு வழித்தடங்களிலும் ரயில் சேவ ரத்து செய்யப்பட்டுள்ளது.



கோவை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கல்லாறு - குன்னூர் இடையே நீலகிரி மலை ரயில் பாதையின் சில பகுதிகள் சேற்றால் மூடப்பட்டன.

பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. காற்று மற்றும் மழையால் வேரோடு சாய்ந்த மரங்களும் தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இவற்றைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல் ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குன்னூர் - உதகமண்டலம் இடையே என்எம்ஆர் ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கப்படும்.

மோசமான வானிலை மற்றும் பாதகமான சூழலையும் மீறி சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...