கோவை கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கிணத்துக்கடவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 486 பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை துறை,சமூக நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 486 பயனாளிகளுக்கு 4 கோடியை 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் கல் குவாரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், இலவச வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.



இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனர் கமலக்கண்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா, சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...