நீலகிரி பந்திப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி அடுத்த பந்திப்பூர் அருகே கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு மைசூர் நோக்கி சென்ற லாரி மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தின் வழியாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை இணைக்க கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரளா, கர்நாடகா செல்லும் கனரக வாகனங்கள் கக்கநல்லா மற்றும் முத்தங்கா சாலைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.



இந்நிலையில் நேற்று இரவு கேரளாவில் இருந்து முத்தங்கா வழியாக மைசூர் நோக்கிச் சென்ற கோவை பதிவு எண் கொண்ட லாரி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் அருகே சாலையை கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பந்திப்பூர் வனத்துறையினர் லாரியை பிடித்து வைத்துள்ளதுடன் யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...